#வாழ்வில்தெரிந்துகொள்ளவேண்டியன..
●▬⚜۩۞۩⚜▬●
தவறான பாதையில் " வேகமாக " செல்வதைவிட.
சரியான பாதையில் " மெதுவாக " செல்லுங்கள்.
ஆயிரம் பேரைக்கூட " எதிர்த்து " நில்.
ஒருவரையும் " எதிர்பார்த்து " நிற்காதே.
தேவைக்காக கடன் " வாங்கு ".
கிடைக்கிறதே என்பதற்காக வாங்காதே".
உண்மை எப்போதும் " சுருக்கமாக " பேசப்படுகிறது.
பொய் எப்போதும் " விரிவாக " பேசப்படுகிறது.
" கருப்பு " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
" சிவப்பு " மனிதனின் நிழலும் கருப்புதான்.
" வண்ணங்களில் " இல்லை வாழ்க்கை.
மனித " எண்ணங்களில் " உள்ளது வாழ்க்கை
" கடினமாய் " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.
" கவனமாய் " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.
வியர்வை துளிகள் " உப்பாக " இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை " இனிப்பாக " மாற்றும்.
" கடனாக " இருந்தாலும்சரி,
" அன்பாக " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.
" செலவு " போக மீதியை சேமிக்காதே.
" சேமிப்பு " போக மீதியை செலவுசெய்.
உன்னை நீ செதுக்கி கொண்டே இரு
" வெற்றி " பெற்றால் சிலை,
" தோல்வி " அடைந்தால் சிற்பி..
உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " உயிரற்ற " பணமே முடிவு செய்கிறது..
கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு
" முட்டாள் " என்று தெரியும்.
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" புத்திசாலி " என்பது புரியும்.
பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " போற்றும் ".
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி " தூற்றும் ".
பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " பொய் ".
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " உண்மை ".
மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " புத்திசாலி ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " திறமைசாலி ".
கவலைகள் கற்பனையானவை.
" மீதி " தற்காலிகமானவை.
குறைகளை " தன்னிடம் " தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை " பிறரிடம் " தேடுபவன் களங்கப்படுகிறான்.
அறுந்து போன செருப்புக்கு வீட்டில்
ஒரு இடம் " உண்டு ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " இல்லை "
விழுதல் என்பது " வேதனை ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " 🌸🌀🌸 ```` #சாதனை ```` 🌸🌀🌸
மகிழ்ச்சியுடன் வாழப் பழகு ⚜️🚩
0 comments:
Post a Comment